தென்னிந்திய வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வு மையம்
உலகநாத நாராயணசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொன்னேரி வரலாற்றுத்துறையில் படிக்கும் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இரண்டு நாள் Internship Program தென்னிந்திய வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வு மையத்தின் சார்பாக நடத்தப்பட்டது.
முதல் நாள் நிகழ்வில் தொல்லியலாளர் முனைவர் கோ. சசிகலா, மாநில சுவடிக் குழும ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அவர்கள் “கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி” என்ற தலைப்பில் மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினார்.
இரண்டாம் நாள் கள ஆய்விற்காக மாணவர்கள் திருப்பாலைவனம் திருப்பாச்வரர் கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அக்கோயிலில் உள்ள பழங்கால கல்வெட்டுகள், ஓவியங்கள், சிற்பங்களை மாணவர்கள் ஆர்வத்துடன் ஆய்வு செய்தனர். இரண்டு நாள் பயிற்சியின் முடிவில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
உலகநாத நாராயணசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொன்னேரி வரலாற்றுத்துறையில் படிக்கும் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இரண்டு நாள் Internship Program நடத்தப்பட்டது.
முதல் நாள் நிகழ்வில் தொல்லியலாளர் முனைவர் கோ. சசிகலா அவர்கள் திருவொற்றியூர் வடிவுடைய அம்மன் உடனுறை தியாகராஜசுவாமி திருக்கோயிலின் வரலாறு, கல்வெட்டு மரபுகள், கட்டிடக்கலைச் சிறப்புகள் பற்றி விரிவாக விளக்கினார். இது மாணவர்களுக்கு வரலாற்று ஆய்வின் முக்கியத்துவத்தை உணர்த்தியது.
இரண்டாம் நாள் நிகழ்வில் முனைவர் பேராசிரியர் சி. இளங்கோ, உதவி பேராசிரியர், தமிழ்த்துறை, பச்சையப்பன் கல்லூரி, சென்னை அவர்கள் வரலாறு மற்றும் இலக்கியங்களுக்கிடையேயான தொடர்பைப் பற்றி விளக்கினார். இந்த நிகழ்வு மாணவர்களுக்கு இலக்கிய ஆதாரங்களை ஆய்வில் பயன்படுத்தும் முறைகளை அறிமுகப்படுத்தியது.